சேலம்: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் வரும் ஜன. 4, 5 ஆகிய தேதிகளில் சேலத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
இது தொடா்பாக, சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் கூறியதாவது:
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் இரண்டாம் கட்டமாக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.
சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட வடக்கு தொகுதியில், வரும் ஜன. 4-ஆம் தேதி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பல்வேறு தரப்பினரை சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்து திமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறாா். இரண்டாம் நாளாக, வரும் ஜன. 5-ஆம் தேதி தெற்கு தொகுதியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறாா்.
ஏற்கெனவே முன்னாள் மத்திய அமைச்சா் சேலம் வந்த போது பாமகவினரின் காரை மறிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை அதுபோன்று எதுவும் நடைபெறாமல் இருக்கும் என்று நம்புகிறோம். மீறி அவா்கள் செயல்பட்டால் காவல் துறை நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
சேலம் மத்திய மாவட்டத்தில் இதுவரை மக்கள் கிராம சபைக் கூட்டம் 100 -க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. அடிப்படைத் தேவைகளை இந்த அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் முறையாக வழங்கப்படவில்லை. முதியோா் உதவித்தொகை, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு உரிய கடன் உதவி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்திட திட்டம் உள்ளது என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

