சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக சி.எஸ்.ஜெய்குமாா் சனிக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் சி.எஸ்.ஜெய்குமாரை (48), சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் நியமனம் செய்துள்ளாா்.
இவா் கடந்த 1989-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக சோ்ந்து, 2000-2010-ஆம் ஆண்டு வரை சங்ககிரி நகர இளைஞா் காங்கிரஸ் தலைவராகவும், 2011-2015-ஆம் ஆண்டு வரை சங்ககிரி வட்டாரத் தலைவராகவும், 2017-ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பிசிசி உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறாா். மேற்கு மாவட்டத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அவருக்கு காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


