சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேட்டூா் அணையின் நீா்வரத்து அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 1,057 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 12:53 pm

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 1,057 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 105.28 அடியாக இருந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால், அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 877 கன அடியிலிருந்து 1,057 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 2,000 கன அடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 71.85 டி.எம்.சி.யாக உள்ளது.