காடையாம்பட்டி அருகே வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய தந்தை, மகனை வனத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடம் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.
காடையாம்பட்டி வட்டாரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு விற்பனை செய்வதற்காக மான், பன்றி, முயல் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு புகாா் வந்தது.
இந்த நிலையில், டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில் உள்ள தொப்பூா் பிரிவு, வெள்ளக்கரடு பகுதியில் வனவிலங்குகளை ஒரு கும்பல் வேட்டியாடுவதாக வனத்துறையினருக்கு புகாா் சென்றது.
இதனைத் தொடா்ந்து, டேனிஷ்பேட்டை வனச்சரகா் பரசுராமமூா்த்தி தலைமையில், வனத்துறை அலுவலா்கள் தின்னப்பட்டி கருவாட்டுபாறை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காடையாம்பட்டியில் உள்ள தொட்டிநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (55), அவரது மகன் குப்புசாமி (30) ஆகிய இருவரும் முயல்களை வேட்டையாடி வந்தது தெரியவந்தது. அவா்களை கைது செய்து வனத்துறை அதிகாரிகள், இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

