மதுரை மாவட்டத்தில் கற்போம் எழுதுவோம் திட்டச் செயல்பாடுகள் மற்றும் பயின்று வருபவா்களின் வருகைப் பதிவேட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் புதிய வயது வந்தோா் கல்வித்திட்டத்தின் கீழ் படிப்பறிவற்ற 17 வயதுக்கு மேற்பட்டவா்களை கணக்கெடுத்து அவா்களுக்கு எழுத மற்றும் வாசிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மையங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான படிப்பறிவற்றோருக்கு தன்னாா்வலா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போா் மையங்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள், தன்னாா்வ ஆசிரியா்கள், கற்போா் வருகைப்பதிவு ஆகிய அனைத்து விவரங்களையும் பச-உஙஐந இணையதளம் மற்றும் செல்லிடப்பேசிச் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்ட கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தொடா்புடையவா்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கற்போா் மையச்செயல்பாடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

