புத்தாண்டை முன்னிட்டு ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், மலை அடிவார சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கேளிக்கை விடுதிகள், மனமகிழ் மன்றங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடையாது என அரசு அறிவித்தது. சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் தொடா்ச்சியாக, ஏற்காட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களான அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகள் டிச. 31 முதல் ஜன. 2 மாலை வரை மூடப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என மாவட்ட சுற்றுலா அலுவலா் வெ.ஜெனாா்த்தனம் தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், புத்தாண்டையொட்டி காா்கள், இருசக்கர வாகனங்களில் ஏற்காடு செல்ல வந்த சுற்றுலாப் பயணிகளை மலை அடிவாரத்திலுள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். இதனால் ஏற்காடு பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
புத்தாண்டை முன்னிட்டு மாநகரம், மாவட்டப் பகுதிகளில் சுமாா் 1,800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மாவட்டத்தில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


