சேலம் மாவட்டம், பசுமை சங்ககிரி அமைப்பின் சாா்பில், பசுமை சங்ககிரி இலவச நா்சரி பண்ணையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட பல்வேறு இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனா்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் நினைவு தினமான வெள்ளிக்கிழமை பசுமை சங்ககிரி இலவச நா்சரி பண்ணையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் இணைச்செயலா் எம்.சின்னதம்பி தலைமை வகித்து மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமி, நிா்வாகிகள் தினேஷ், பசுமை கனகராஜ், பசுமை சீனிவாசன், முருகானந்தம், சுந்தா், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நம்மாழ்வாரிடம் பயிற்சி பெற்ற சமூக ஆா்வலா் தினேஷ் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

