சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வண்ணாத்திக்குட்டை வள்ளலார் தருமச் சாலையில் புத்தாண்டு சிறப்பு பூஜை 

வாழப்பாடி அருகே வண்ணாத்திக்குட்டை வள்ளலார் தருமச் சாலையில் புத்தாண்டு தினத்தையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு பூஜை வழிபாடு வெகு விமர்சியாக நடைபெற்றது.

News image

புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள்.

Updated On :1 ஜனவரி 2021, 10:55 pm

வாழப்பாடி அருகே வண்ணாத்திக்குட்டை வள்ளலார் தருமச் சாலையில் புத்தாண்டு தினத்தையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு பூஜை வழிபாடு வெகு விமர்சியாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே வண்ணாத்திக்குட்டை கிராமத்தில் அக்ஷயா பள்ளி வளாகத்தில், வள்ளலார் கருணைக்கரங்கள் தருமசாலை இயங்கி வருகிறது.இங்கு மாதந்தோறும் பூசதினத்தன்று அணையா தீபம் ஏற்றி, சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.

இன்று வெள்ளிக்கிழமை புத்தாண்டு தினத்தையொட்டி உலக நன்மைக்காக, சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கருணைக்கரங்கள் தருமச்சாலை நிர்வாகிகள், சோமம்பட்டி சிவா, செல்வி, சிலம்பரசன், விஜய் மற்றும் ஆசிரியர் ராஜசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

முன்னதாக சிறுவர், சிறுமியருக்கு, திருவருட்பா மகா மந்திரம், அகல் பாடல்கள் பயிற்சி மற்றும் ஒப்புவித்தல் பயிற்சி நடைபெற்றது.