திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித் தவசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி திங்கள்கிழமை (ஜூலை 22) நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இக் கோவிலில் ஆடித் தவசு திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. கோவிலிலும், மண்டகப்படியிலும் கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, காலையில் மூலஸ்தானம் சுவாமி, அம்பாளுக்கு கும்பம் அபிஷேகம் நடைபெறும். பின்னர், முற்பகல் 11.45 மணிக்கு அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி தவசு மண்டபத்துக்குச் செல்வார்.
அதேநேரம், சுவாமிக்கு காலையில் பட்டுப் பரிவட்டம், அலங்காரத்துக்குரிய பொருள்கள் சகிதம் மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்குதல், மூலஸ்தானம் சுவாமி, அம்பாள், சந்திரமெüலீஸ்வரருக்கு கும்பம் அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடர்ந்து, சுவாமி மாலையில் கோவிலிலிருந்து புறப்பட்டு, தெற்கு ரத வீதியில் அமைக்கப்பட்டுள்ள தவசுப் பந்தலுக்கு வருவார். அப்போது, தவசு மண்டபத்திலிருந்து அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி எதிர்ப்பந்தலுக்கு வருவார்.
மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சியளிப்பார். இரவு 11 மணிக்கு சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சியளிப்பார்.
பக்தர்கள் குவிந்தனர்: இந் நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமையே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

