திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டுள்ளார் ஸ்ரீ சனீஸ்வர பகவான்.
இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 7.40 மணியளவில் தொடங்கியது. பெரிய தேரில் ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமியும், சிறிய தேரில் ஸ்ரீ நீலோத்பாலாம்பாளும் எழுந்தருளினர்.
தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், 2 தேர்களையும் வடம் பிடித்தனர். கோயிலின் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு வீதிகளின் வழியே தேர் சென்று மாலை 5 மணியளவில் நிலையை அடைந்தது.
÷திருநள்ளாறு சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். சிவா, மாவட்ட ஆட்சியர் ஜெ. அசோக்குமார், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஏ. ஆன்டோ அல்போன்ஸ், தருமபுர ஆதீனக் கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அலுவலர் ஏ.ராஜராஜன் வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

