சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருமலையில் ஏப்ரல் 9ஆம் தேதி 6 மணி நேரம் தரிசனம் ரத்து

திருமலை ஏழுமலையான் தரிசனம் ஏப்ரல் 9 ஆம் தேதி 6 மணி நேரம் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On :2 ஏப்ரல் 2013, 9:17 am

திருமலை ஏழுமலையான் தரிசனம் ஏப்ரல் 9 ஆம் தேதி 6 மணி நேரம் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். பிரம்மோற்ஸவம், உகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு), ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவ தினங்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.

இம்மாதம் 11ஆம் தேதி உகாதி பண்டிகை என்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) கோயிலை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்காக அன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அந்நாளில் ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.