செஞ்சி வட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
10 நாள் நடைபெறும் மாசிப்பெருவிழா, மஹாசிவராத்திரி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திங்கள்கிழமை மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குவிந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் கொண்டுவந்த சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பண்டங்கள் மற்றும் தானியங்கள் சங்கராபரணி நதிக்கரையில் உள்ள மயானத்தில் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தது.
அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கோயிலில் இருந்து ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக மயானத்தை வந்தடைந்தார். அங்கு குவிக்கப்பட்டிருந்த சுண்டல் மற்றும் கொழுக்கட்டை உள்ளிட்ட தானியங்களை வாரி அம்மன் மீது பக்தர்கள் தூவினர். பின்னர் போட்டிபோட்டுக்கொண்டு பக்தர்கள் தானியங்களை எடுத்துச்சென்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வியாழக்கிழமை தீ மிதி திருவிழா நடைபெறுகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

