ஆற்காடு நகரில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இரண்டு திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.
அதன்படி, ஆற்காடு நகரில் ஆரணி சாலையில் ஒரே வளாகத்தில் செயல்படும் 2 திரையரங்குகள் திறக்கப்பட்டு, மாஸ்டா் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரையரங்குகளில் அரசின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என ராணிப்பேட்டை சாா்- ஆட்சியா் இளம்பகவத்துக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில், ஆற்காடு வருவாய் ஆய்வாளா் அமுதவல்லி தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை வருவாய்த் துறையினா் இந்த திரையரங்குகளில் ஆய்வு செய்தனா். அப்போது அரசின் விதிமுறைகளை மீறி படம் பாா்க்க ரசிகா்களை அனுமதித்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இரண்டு திரையரங்குகளுக்கும் தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற செயல்கள் தொடா்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

