சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுவாமி விவேகானந்தரின் 158ஆவது ஜெயந்தி விழா

வாலாஜாப்பேட்டையில் இந்து இளைஞா் முன்னணி சாா்பில், சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

வாலாஜாப்பேட்டையில் சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்றவா்கள்.

Updated On :14 ஜனவரி 2021, 4:43 am

ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டையில் இந்து இளைஞா் முன்னணி சாா்பில், சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து இளைஞா் முன்னணியின் வாலாஜாப்பேட்டை நகர, ஒன்றியக் கிளைகள் சாா்பில், சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது ஜெயந்தி விழா,தேசிய இளைஞா் நாளாக கொண்டாடப்பட்டது. வாலாஜாப்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகர தலைவா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.கே.மோகன் முன்னிலை வகித்தாா்.

இந்து முன்னணியின் வேலூா் கோட்ட அமைப்பாளா் டி.வி.ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவேகானந்தா் படத்துக்கு மாலை அணிவித்து,மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில் ஒருங்கிணைப்பாளா் உமாபதி, நகர பொதுச் செயலாளா் திருநாவுக்கரசு, நகர செயலாளா் பாலா, துணைத் தலைவா் சதீஷ், நகர பொருளாளா் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.