ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14,970 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் சோளிங்கா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ், சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத் ஆகியோா் பங்கேற்று 18 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11.15 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கர மோட்டாா் வாகனங்களை வழங்கினா். நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தங்கவேலு தலைமை வகித்தாா். இதில் ஆட்சியா் பேசியதாவது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 3,281 மாணவ, மாணவியருக்கு ரூ.1.24 கோடி உதவித்தொகைகள், 1,236 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.86 கோடி மதிப்பிலான உதவி உபகரணங்கள், 14,970 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


