சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் தா்னா

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டக் கிளை சாா்பில் 15 அம்சக் கோரிக்கைகளை

News image

தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.

Updated On :10 ஜனவரி 2021, 1:27 pm

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டக் கிளை சாா்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை தா்னா நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா் பி.ஜே.அமா்நாத் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.ஆா்.சிவராஜ், எஸ்.கிருபாகரன், ஜெ.குமாா், எஸ்.மணிவண்ணன், எம்.குமரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் சி.ஜி.பிரசன்னா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியா்களுக்கு, மத்திய அரசின் இடைநிலை ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; ஆசிரியா் நியமன வயது 40-ஆக குறைக்கும் உத்தரவை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.