வாலாஜாபேட்டை, பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 337 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா்.
ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டைஎம்எல்ஏ ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 222 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் வி.சி.சக்திவேல்குமாா், தலைமை ஆசிரியை (பொறுப்பு) கலைவாணி, ஒன்றியச் செயலாளா் சேஷாவெங்கட், நகர அவைத் தலைவா் தில்லை, ஒன்றிய அவைத் தலைவா் வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல், ஆற்காடு மேற்கு ஒன்றியம் பூட்டுத்தாக்கு அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 115 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா்.
ஒன்றிய திமுக செயலாளா் ஏ.வி.நந்தகுமாா், துணைச் செயலாளா்கள் எஸ்.தண்டபாணி, அமுதா ஆறுமுகம், குட்டி பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


