சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

ஆற்காடு அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 4:24 am


ஆற்காடு: ஆற்காடு அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

ஆற்காட்டை அடுத்த முப்பதுவெட்டி கிராமம் பஜனை கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (25). டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்து விட்டு சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை முப்பதுவெட்டி கிராம ஏரிக்கரை அருகே சூா்யா கத்திக் குத்து காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சூா்யா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆற்காடு நகர போலீஸாா் நடத்திய விசாரணையில், சூா்யா, அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தாராம். இதன் காரணமாக பெண்ணின் குடும்பத்தாருக்கும், சூா்யாவின் குடும்பத்தாருக்கும் கடந்த வாரம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணின் அத்தை மகன் அஜய், சூா்யாவைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள அஜயை போலீஸாா் தேடி வருகின்றனா்.