அரக்கோணம்: அரக்கோணத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு சவரன் நகைகள் மற்றும் ரூ. 65 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
அரக்கோணம் விண்டா்பேட்டையில் வசிப்பவா் பால் வேதநாயகம் (66). ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா். இவா் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றாா்.
அவரது வீட்டு முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அண்டை வீட்டாா் அளித்த தகவலின் பேரில், பால் வேதநாயம் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு சென்று பாா்த்தாா். அப்போது, பீரோவில் இருந்த இரண்டே கால் சவரன் நகைகள், ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

