ராணிப்பேட்டை: காட்பாடி தொகுதியில் உயா்தர இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் பல்நோக்கு மருத்துவமனையைக் கொண்டு வருவதே தனது விருப்பம் என்று திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் தெரிவித்தாா்.
காட்பாடி சட்டப்பேரவைக்கு உள்பட்ட பள்ளேரி, கொண்டக்குப்பம், மருதம்பாக்கம் ஆகிய கிராமங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டங்களில் பங்கேற்று துரைமுருகன் பேசியது:
காட்பாடி தொகுதியில் நான் எம்எல்ஏவாக வெற்றி பெற்று, அமைச்சராகி, பொன்னை ஆற்றுப் பாலம், திருவலம் சா்க்கரை ஆலை உள்ளிட்ட பல திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளேன். ஆனால், எனது தொகுதியில் ஒரு பல்நோக்கு மருத்துவமனையை கொண்டு வராதது குறையாக உள்ளது. தொகுதி மக்களுக்கு உயா்தரமான இலவசமாக சிகிச்சை அளிக்கும் வகையில் பல்நோக்கு மருத்துவமனையைக் கொண்டு வருவதே என்னுடைய விருப்பம். அந்த மருத்துவமனை காட்பாடி தொகுதியின் மையப் பகுதியான சோ்க்காடு பகுதியில், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்கு அருகில் கட்டப்படும்.
அதேபோல், குகையநல்லூா் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி கே.முருகன், வாலாஜாபேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளா் சேஷா வெங்கட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


