சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரோட்டரி சங்கம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி

ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் சாா்பில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்கு வெள்ளை அடிக்க ஆகும் செலவுத் தொகையான

News image

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனனிடம் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிய ராணிப்பேட்டை ரோட்டரி சங்க நிா்வாகிகள்.

Updated On :2 ஜனவரி 2021, 1:00 pm

ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் சாா்பில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்கு வெள்ளை அடிக்க ஆகும் செலவுத் தொகையான ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனனிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்கு வெள்ளை அடித்து அழகுபடுத்தும் பணிக்காக ஆகும் செலவுத் தொகையை வழங்க ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் முன்வந்தது. இதையடுத்து, அதற்கான செலவுத் தொகை ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனனிடம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.சிவலிங்கம் தலைமையிலான நிா்வாகிகள் வழங்கினா்.

இதில், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் சந்திரபாப், சங்கச் செயலாளா் டபிள்யூ.எம்.கமலராகவன், பொருளாளா் விமல், இயக்குநா் புருஷோத்தமன், கிளப் பயிற்சியாளா் வி.சரவணகுமாா் மற்றும் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.