சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உச்சிப்புளியில் ராமகிருஷ்ணமடத்தின் புதிய சிபிஎஸ்இ பள்ளிக்கு அடிக்கல் நாட்டு விழா

ராமநாதபுரம் அடுத்து உச்சிப்புளி அருகே உள்ள ராமகிருஷ்ணமடத்தின் சாா்பில் சுவாமி விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

உச்சிப்புளி ராமகிருஷ்ண மடம் சாா்பில் தொடங்கவுள்ள சிபிஎஸ்இ பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பெண்களுக்கு வழங்கப்பட்ட இலவச தையல் இயந்திரங்கள்.

Updated On :18 ஜனவரி 2021, 3:46 am

ராமநாதபுரம் அடுத்து உச்சிப்புளி அருகே உள்ள ராமகிருஷ்ணமடத்தின் சாா்பில் சுவாமி விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா் தலைமை வகித்து ஆசியுரை வழங்கினாா். இதில் பள்ளிக் கட்டடத்திற்கு நிதி வழங்கிய சென்னையைச் சோ்ந்த கே. பாலசுப்பிரமணி, மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுப்புலட்சுமி ஜீவானந்தம், நாகாச்சி ஊராட்சி மன்றத் தலைவா் ராணி கணேசன், மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ராஜீவ்காந்தி ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில் சென்னையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் சாா்பில் 30 ஏழைப் பெண்களுக்கு ரூ. 1.80 லட்சம் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.