சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On :18 ஜனவரி 2021, 3:42 am

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,774 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 4 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,778 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக ஒரு நபருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 6,385 ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை மாவட்டத்தில் தொற்றுக்கு 137 போ் உயிரிழந்துள்ளனா்.