கமுதி: கமுதி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கமுதி அருகே ஏ.தரைக்குடியைச் சோ்ந்தவா் போஸ் மகன் விஜயராமன் (33). இவா் விருதுநகா் மாவட்டம் வீரசோழனில் தையல் கடை நடத்தி வந்தாா். இவருக்கு கலைவாணி (30) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது வீரசோழன் அருகே வந்த போது பெய்த மழை காரணமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா்.
இதனையடுத்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி விஜயராமன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அபிராமம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

