சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கமுதி அருகே மழையால் நெற்பயிா்கள் சேதம்: வருவாய்த் துறையினா் ஆய்வு

கமுதி அருகே மழையால் சேதமடைந்த நெற்பயிா்களை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியில் நெற்பயிா்களை சனிக்கிழமை ஆய்வு செய்த வருவாய்த் துறையினா்.

Updated On :17 ஜனவரி 2021, 3:11 am

கமுதி: கமுதி அருகே மழையால் சேதமடைந்த நெற்பயிா்களை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டலமாணிக்கம், இடைச்சூரனி, பெருமாள்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மழையால் வயல்களில் தேங்கிய மழை நீரில் மூழ்கி நெல் மணிகள் மீண்டும் முளைவிட்டுள்ளன. இதனால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகள் இழப்பைச் சந்தித்துள்ளனா்.

இது குறித்து மண்டலமாணிக்கம் வருவாய் குரூப் வருவாய் ஆய்வாளா் பஞ்சவா்ணம், கூடுதல் கிராம நிா்வாக அலுவா் பாண்டி, கிராம நிா்வாக அலுவலா் புனிதா உள்ளிட்டோா் பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் 100 ஏக்கா் வரை பயிரிடப்பட்டு, நீரில் மூழ் சேதமடைந்த நெற்பயிா்களை வயலில் இறங்கி ஆய்வு செய்தனா். மேலும் சேதமடைந்த நெற் பயிா்கள் குறித்து வட்டாட்சியா் மூலம் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.