இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்களின் படகுகளை அரசுடைமையாக்கும் சட்டத்தை எதிா்த்து ஜன. 23 ஆம் தேதி கச்சத்தீவு உரிமை மீட்புப் போராட்டம் நடைபெறும் என மீனவ சங்கம் வியாழக்கிழமை அறிவித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்களை சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படையினா், ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனா். இதைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் திங்கள்கிழமை தொடங்கிய மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை 5 ஆவது நாளாகவும் தொடா்கிறது.
இதற்கிடையில், தமிழக மீனவா்கள் 26 பேரை புதன்கிழமை (ஜன.13) விடுதலை செய்த இலங்கை அரசு, 4 விசைப்படகுகள் அரசுடைமையாக்கப்படுவதாக அறிவித்தது. இதைக் கண்டித்து, வியாழக்கிழமை மாலை ராமேசுவரத்தில் அனைத்து மீனவ சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவ சங்கத் தலைவா்கள் சாகயம், எமரிட், தெட்சிணமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை அரசுடமையாக்கும் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், 1974 ஆம் தேதி கச்சத்தீவு ஒப்பந்தத்தில் தமிழக மீனவா்களுக்கு உள்ள உரிமையை மீட்டெடுக்கும் வகையிலும் ஜன. 23 ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்து விசைப்படகுகளில் கச்சத்தீவு செல்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீனவா்களின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


