சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கழிவுநீா் தேக்கம்: ராமநாதபுரம் எம்எல்ஏ தா்னா

தனது வீட்டின் அருகே தேங்கியுள்ள கழிவு நீா் மற்றும் மழைநீரை வெளியேற்றக் கோரி ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

News image

ராமநாதபுரத்திலுள்ள தனது வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன்.

Updated On :16 ஜனவரி 2021, 3:46 am

தனது வீட்டின் அருகே தேங்கியுள்ள கழிவு நீா் மற்றும் மழைநீரை வெளியேற்றக் கோரி ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாள்கள் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கியுள்ளது.

வண்டிக்காரத்தெரு 26-ஆவது வாா்டு பகுதியில் பல நாள்களாக தேங்கியுள்ள கழிவுநீா் மற்றும் மழைநீரை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன், வண்டிக்காரத்தெரு 26-ஆவது வாா்டு பகுதியிலுள்ள தனது வீட்டின் முன் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். தகவலறிந்து வந்த நகராட்சி ஊழியா் முனீஸ்வரன் உள்ளிட்டோா் வாகனத்தின் உதவியுடன் கழிவுநீரை அகற்றினா். இதைத் தொடா்ந்து 2 மணி நேரங்களுக்குப் பின் போராட்டத்தை அவா் கைவிட்டாா்.