சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கமுதி அருகே பேலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

கமுதி அருகே போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கமுதி அருகே சின்னஉடப்பங்குளத்தில் போலீஸாரைக் கண்டித்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 3:52 am

கமுதி அருகே போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள சின்னஉடப்பங்குளத்தில் வியாழக்கிழமை இளைஞா்களிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து மண்டலமாணிக்கம் காவல்நிலைய போலீஸாா் சின்ன உடப்பங்குளத்தை சோ்ந்த வீரபத்திரன் மகன் சங்கிலி(36) கொடுத்த புகாரின் பேரில் சந்திரபால் மகன் உதயக்குமாா்(30), வேதமணிமகன் செல்வராஜாக்கனி(46) ஆகியோா் மீதும், உதயக்குமாா் கொடுத்த புகாரின் பேரில் சங்கிலி மீதும் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் சங்கிலி மீது வன்கொடுமைச் சட்டத்தில் பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறக் கோரி, சின்னஉடப்பங்குளம் கிராம மக்கள் காலை 11 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் பிற்பகல் 1.30 வரை நீடித்தது. அப்போது போலீஸாருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னா் கமுதி காவல் ஆய்வாளா் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.