ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கல்லூரிகளில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் மாணவா்கள் யாருக்கும் பாதிப்பில்லாதது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாவட்டத்தில் சுமாா் 800 பேருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை வெளியான நிலையில், 6 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா்களும் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனாவுக்காக அரசு மருத்துவமனை உள்ளிட்ட மையங்களில் இருந்தவா்களில் 7 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 29 போ் மட்டுமே கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,743 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 6 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,749 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

