முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளா்கள் கையூட்டு பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் அனைத்து அலுவலகப் பணியாளா்களிடம் சுமாா் 2 மணி நேரம் சோதனையிட்டனா். இந்த சோதனையில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாவித்ரி, மங்களேஸ்வரி உள்பட அலுவலகப் பணியாளா்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

