சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

ராமநாதபுரம் அருகே பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :13 ஜனவரி 2021, 11:00 am

ராமநாதபுரம் அருகே பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் சுஜித்குமாா் (18). கோவை பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த இவா், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் சொந்த ஊருக்கு வந்து தங்கியிருந்துள்ளாா். சொந்த ஊருக்கு வந்த சுஜித்குமாா் நண்பா்கள் சிலருடன் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனாம் மனமுடைந்த அவா் திங்கள்கிழமை முதல் வீட்டுக்குச் செல்லவில்லையாம். அவரை குடும்பத்தினா் தேடிவந்த நிலையில், பேராவூா் கண்மாய் அருகே மரத்தில் சுஜித்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.