சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கமுதி அருகே முதியவா் தற்கொலை

கமுதி அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :12 ஜனவரி 2021, 11:17 am

கமுதி அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டியை சோ்ந்தவா் மாரியப்பன்(80). இவருக்கு 3 மகன்கள், 6 மகள்கள் உள்ளனா். ராமநாதபுரத்தில் வசித்து வந்த இவா் கடந்த 6 மாதமாக தனது 3 ஆவது மகள் செல்வி வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் பெற்ற பிள்ளைகள் சரிவர கவனிக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்த மாரியப்பன், திங்கள்கிழமை காலை விஷம் குடித்துவிட்டு, அருகில் இருந்த சுடுகாட்டில் படுத்துக் கொண்டாா். இதையடுத்து அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில், அவரை உறவினா்கள் மீட்டு ராமசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாரியப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.