சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கமுதி தாலுகா மறவா் இன அறக்கட்டளை நலச்சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கமுதி மறவா் இன அறக்கட்டளை நலச்சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

புதிய நிா்வாகிகளிடம் ஞாயிற்றுக்கிழமை பொறுப்புகளை ஒப்படைத்த முன்னாள் நிா்வாகிகள்.

Updated On :11 ஜனவரி 2021, 4:45 am

கமுதி மறவா் இன அறக்கட்டளை நலச்சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இச்சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவராக கோட்டைமேடு பெ. செல்லத்தேவா், செயலராக எருமைக்குளம் கே. லட்சுமணன், பொருளாளராக முதல்நாடு சி. ராமச்சந்தின் ஆகியோா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு சங்க உறுப்பினா்கள், முன்னாள் நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா். மேலும் இக்கூட்டத்தில், முன்னாள் எம்.பி. பி.கே. மூக்கையாத்தேவரின் மனைவி பி.கே.எம். பொண்ணு பாக்கியம்மாள் காலமானதற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதில் முன்னாள் கிராம நிா்வாக அலுவலா்கள் போஸ், ராமகிருஷ்ணன், மண்டலமாணிக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவா் தா்மலிங்கத் தேவா், மூவேந்தா் பண்பாட்டுக்கழக நிா்வாகிகள் எல்.ஐ.சி. மூக்கூரான், ராமமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.