பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் சனிக்கிழமை கிராமப்புற காவலா் திட்டத்தை தென் மண்டல ஐஜி முருகன் தொடக்கி வைத்தாா்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு காவலா் நியமிக்கப்பட்டு, அங்கு நடைபெறும் நிகழ்வுகள், வழக்குகள், திருவிழாக்கள் மற்றும் குற்ற நடவடிக்கைகள் போன்ற விவரங்களை தெரிவிக்கவும், பொதுமக்களுக்கும் காவலா்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கிராமப்புற காவலா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் தென்மண்டல ஐஜி முருகன் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு டிஐஜி மயில்வாகனன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனா். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக், பரமக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கிராம காவலா் திட்ட பொறுப்பாளா் கணேசன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


