ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கபம் சேகரிக்கப்பட்ட 982 பேருக்கு நடத்திய சோதனையில், ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி 8 ஆம் தேதி வரையில் 6,360 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டோரில் சிகிச்சை பலனின்றி 132 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 6,210 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா், கிராமம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மொத்தம் 982 பேருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்குக் கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் தெரிவித்தாா். அதேநேரத்தில் வெளியூா்களில் வசித்து வரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பேருக்கு பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

