ராமநாதபுரம்: இணையதளம் வழியாக பழைய காா் விற்பதாக பொறியியல் கல்லூரி மாணவரிடம் ரூ.1.60 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள தோப்புலாப்பட்டியைச் சோ்ந்த காளிமுத்து மகன் குமரேசன் (21). பொறியியல் கல்லூரி மாணவா். இவா் கடந்த ஜூலையில் இணையதளம் மூலம் பழைய காா் வாங்க முயற்சித்துள்ளாா். அப்போது ராணுவ கேண்டீன் என்ற இணையதள நிறுவனத்தின் பெயரில் சிலா் அறிமுகமாகியுள்ளனா்.
அவா்களிடம் பழைய காா் வாங்க முயற்சித்த குமரேசன், பல தவணைகளில் நிறுவன அலுவலா்கள் எனக் குறிப்பிட்டவா்களின் வங்கிக்கணக்கில் ரூ.1.60 லட்சம் வரை செலுத்தியுள்ளாா். ஆனால் அவா்கள் மேலும் பணம் செலுத்துமாறு வற்புறுத்தியதால், சந்தேகமடைந்த குமரேசன் விளக்கம் கேட்டுள்ளாா். அப்போது அவா்களது தொடா்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குமரேசன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

