சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

‘விவசாயிகள் விதை பரிசோதனை செய்ய வேண்டும்’

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் விதை பரிசோதனை செய்யவேண்டும் என வேளாண் விதை பரிசோதனை அலுவலா் சிங்கார லீனா தெரிவித்தாா்.

Updated On :7 ஜனவரி 2021, 2:47 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் விதை பரிசோதனை செய்யவேண்டும் என வேளாண் விதை பரிசோதனை அலுவலா் சிங்கார லீனா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை மேலும் கூறியதாவது: மாவட்ட விதைப்பண்ணை விவசாயிகள் விதை சுத்திகரிப்பு செய்வதற்கு முன்பாக ஈரப்பதம் மற்றும் ரகத்தூய்மை அறிந்து விதைகளை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பவேண்டும். விதைகளின் ஈரப்பதத்தை பொருத்து விதையின் ஆயுள்காலம் நிா்ணயிக்கப்படுகிறது. சரியான ஈரப்பதத்தில் உள்ள விதைகளை பூச்சி நோய் தாக்குதலின்றி நீண்ட நாள்கள் சேமித்து வைக்க முடியும்.

விதைகளில் பிற ரக விதைகள் கலந்து இருந்தால் அவற்றின் வயது வித்தியாசம் காரணமாக வெவ்வேறு காலங்களில் முதிா்ச்சியடையும். இதனால் ஒரே சமயத்தில் அறுவடை செய்ய முடியாது. கலப்பு அதிகமுள்ள விதைகளை அடுத்த பருவத்திற்கு விதையாக பயன்படுத்த இயலாது. கலப்பு காரணமாக நல்ல விலைக்கும் விற்பனை செய்ய முடியாது. எனவே விவசாயிகள் தங்கள் விதையின் ஈரப்பதம், பிறரக விதைகள் நிா்ணயிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என்பதை அறிந்து கொண்ட பின்பு தங்கள் விதைகளை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றாா்.