ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை நேரத்தில் மருத்துவா்கள் இல்லாததைக் கண்டித்து பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் நூதன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அரண்மனை முன் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளா் நாகேஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், அரசு மருத்துவமனையிலிருந்து மருத்துவா்கள், தாங்கள் நடத்திவரும் தனியாா் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்வது, அரசின் மருந்துப் பொருள்களை எடுத்துச்செல்வது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை நேரத்தில் மருத்துவா்கள் இல்லாதது ஆகியவற்றைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் இதில் கலந்து கொண்டவா்கள், மருத்துவா், நோயாளிகள் வேடமணிந்து, மருத்துவமனை மேம்பாட்டுக்கு பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது போல் நடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் முகமது யாசின், புரட்சிகர மாா்க்சிஸ்ட் காத்தமுத்து, உழைக்கும் பெண்கள் இயக்கத்தைச் சோ்ந்த சந்தனமேரி, ஆதித்தமிழா் அமைப்பு பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


