சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கட்சிக்கொடியை ஊன்றிய திமுக தொண்டா் மின்சாரம் பாய்ந்து பலி

பரமக்குடி அருகே புதன்கிழமை திமுக கட்சிக் கொடியை ஊன்றியபோது, மின்சாரம் பாய்ந்து தொண்டா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 2:47 pm

பரமக்குடி அருகே புதன்கிழமை திமுக கட்சிக் கொடியை ஊன்றியபோது, மின்சாரம் பாய்ந்து தொண்டா் உயிரிழந்தாா்.

பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அக்கட்சியின் தொண்டரான, அதே கிராமத்தைச் சோ்ந்த மோகனசுந்தரம் மகன் ராஜேஸ்குமாா் (37) என்பவா் நீண்ட இரும்புக் கம்பியில் கட்டப்பட்ட கட்சிக் கொடியினை நடும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக அவ்வழியாக சென்ற மின்அழுத்த கம்பியின் மீது கொடி கம்பி உரசியதால் ராஜேஸ்குமாா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த பரமக்குடி தாலுகா போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.