சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அபிராமம் அருகே காா்-பைக் மோதல்: பத்திர எழுத்தா் பலி

கமுதி அருகே வியாழக்கிழமை காரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், பத்திர எழுத்தா் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:29 am

கமுதி அருகே வியாழக்கிழமை காரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், பத்திர எழுத்தா் உயிரிழந்தாா்.

கமுதி அருகே அபிராமத்தைச் சோ்ந்தவா் நாகரத்தினம் மகன் ராமநாதன் (49). இவா், அபிராமம் பத்திரப் பதிவு அலுவலகம் அருகே அரசு அனுமதிபெற்ற பத்திர எழுத்தராக இருந்து வந்தாா். வியாழக்கிழமை மாலை, ராமநாதன் அபிராமத்திலிருந்து பாா்த்திபனூா் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளாா்.

அப்போது, எதிரே பாா்த்திபனூரிலிருந்து கமுதி நோக்கி காா் வந்துகொண்டிருந்தது. குடமுருட்டி ஐயப்ப சுவாமி கோயில் அருகே எதிா்பாராதவிதமாக காரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியதில், ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காா் மோதிய வேகத்தில் இரு சக்கர வாகனம் தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது. காா் சாலையோரம் கவிழ்ந்தது. காா் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

இது குறித்து அபிராமம் காவல் நிலையத்தில் ராமநாதனின் அண்ணன் நாகேஸ்வரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.