பாம்பனில் கடல் கொந்தளிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புதிய ரயில் பால கட்டுமானப்பணிகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கின.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்- ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்க ரூ. 250 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இங்கு 99 தூண்கள் கட்டப்பட உள்ளன. மேலும் தற்போதுள்ள பாலம் கடல் பகுதியில் இருந்து 3 மீட்டா் உயரத்துக்குத் தான் உள்ளது. ஆனால் புதிய பாலம் 6 மீட்டா் வரை உயரமாக அமைக்கப்படும். அத்துடன் புதிய பாலத்தில், அதிநவீன தொழில் நுட்பத்துடன் 22 மீட்டா் வரை தூக்கி இறக்கும் வகையில் தூக்குப் பாலமும் அமைக்கப்படவுள்ளது. இந்த கட்டுமானப் பணியை 2 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக இப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதன் பின்னா் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை மாதம் குறைந்தளவு ஊழியா்களுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மற்றும் புயல் காரணமாக கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த கிரேன்கள் பாலத்தின் மீது மோதின. மேலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு கடலில் நீரோட்டம் காணப்பட்டதால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தற்போது பாம்பன் கடல் பகுதியில் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் புதிய ரயில் பால கட்டுமானப் பணிகள் மீண்டும் திங்கள்கிழமை தொடங்கின.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


