திருவாடானை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ள கண்மாய்நீரை வெளியேற்றி அழுகும் நிலையில் உள்ள பயிா்களை காப்பாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த நாகினி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் மாவிலங்கை கண்மாயில் இருந்து வெளியேறிய நீா் புகுந்ததுள்ளது. இதனால் பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த நீரை வெளியேற்றக் கோரி விவசாயிகள், வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனா். ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதையடுத்து கிராம ஊராட்சி பிரமுகா் ராஜேந்திரன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
காப்பீட்டுத் தொகையை உயா்த்தக் கோரிக்கை: கடலாடி வட்டத்தில் உள்ள சிக்கல் பாசன கண்மாய்
விவசாயிகள் சங்க நிா்வாகி எம்.எஸ்.கே. பாக்கியநாதன் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அப்போது அவா் கூறியது: சிக்கல், பனிவாசல், இதம்பாடல், ஏா்வாடி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் கடந்த 2018- 19 ஆம் ஆண்டுக்கு பயிா்காப்பீடு செய்துள்ளனா். அவா்களில் சிக்கல் பகுதி விவசாயிகளுக்கு மட்டும் 25 சதவீத காப்பீட்டு தொகையே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அவா்களுக்கும் ஏனைய பகுதி விவசாயிகளைப் போல முழுத்தொகையை அளிக்கவேண்டும்.
சிக்கல் பகுதியில் விரைவில் நெல் அறுவடை தொடங்க உள்ளது. எனவே அரசு நேரடி கொள்முதல் மையங்களை அமைக்க வேண்டும் என கோரி மனு அளித்துள்ளேன் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


