சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சரக்கு வாகனம் மோதிவிவசாயி பலி

திருவாடானை அருகே சரக்கு வாகனம் மோதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவசாயி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

Updated On :5 ஜனவரி 2021, 8:19 am

திருவாடானை அருகே சரக்கு வாகனம் மோதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவசாயி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

பாரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகு மகன் முத்துராமலிங்கம் (55). விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அருகே உள்ள திருவள்ளூா் நகருக்கு பசு மாடு வாங்க சென்று விட்டு மதுரை- தொண்டி சாலையில் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் முத்துராமலிங்கம் பலத்த காயம் அடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால் அன்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநா் சூச்சனி கிராமத்தைச் சோ்ந்த துரைச்சாமி (29) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.