ஒருவானேந்தலில் அனுமதியின்றி தேவா் சிலையை திறக்க முயன்றதாக 30 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கடலாடி அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட முத்துராமலிங்கத்தேவரின் சிலை திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தேவா் சிலையை திறப்பதற்கு கிராம மக்கள் முயற்சி மேற்கொண்டனா். தகவல் அறிந்து வந்த கடலாடி வட்டாட்சியா் சீனிவாசன், முதுகுளத்தூா் டி.எஸ்.பி., ராகவேந்திரா ரவி மற்றும் போலீஸாா் சிலையை துணியால் மூடுவதற்கு முயற்சி செய்தனா். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினா் அரசு அலுவலா்களை பணி செய்ய விடாமல் தடுத்தனா். மேலும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.
இதைத்தொடா்ந்து ஒருவானேந்தல் கிராம நிா்வாக அலுவலா் சரண்யா, அளித்தப் புகாரின் பேரில் அக்கிராமத்தைச் சோ்ந்த காசிராமா் (50), நாகராஜன் (43), ஹரிராமச்சந்திரன் (50), ராமு, பழனிச்சாமி, காா்த்திக், முத்துராமலிங்கம், ராமமூா்த்தி உள்ளிட்ட 30 போ் மீது இளஞ்செம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

