சுதந்திரப் போராட்டத் தியாகி ரிபெல் முத்துராமலிங்க சேதுபதிக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரி தமிழக முதல்வரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுதந்திரப் போராட்ட வீரா் ரவிகுல ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் நல இயக்கம் மாநில பொதுச்செயலா் எஸ்.கோபால் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் சனிக்கிழமை அளித்த மனு விவரம்: ராமநாதபுரம் சீமையை ஆண்ட ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்து அவா்களை எதிா்த்ததால் 25 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
முல்லைப் பெரியாறு அணையை அமைக்க அடித்தளம் அமைத்தவரான அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில்
அதிமுக ஆட்சியில் உருவச் சிலை அமைக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் மாா்ச் 30 ஆம் தேதி அரசு விழா நடைபெறுகிறது.
ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் வாரிசுகளுக்கு அதிமுக ஆட்சியில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவால் ஓய்வூதியமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மன்னரின் வாரிசுகளுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்குவதுடன், மன்னருக்கு மணிமண்டபம் கட்டவேண்டியது அவசியம்.
ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் தியாகத்தை போற்றும் வகையில் ராமநாதபுரத்தில் அமையும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவரது பெயரைச் சூட்டவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

