ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவா்கள் 17 நாள்களுக்குப் பின், காலவரைற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றதுடன், சனிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த டிசம்பா் 14 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 29 மீனவா்கள் மற்றும் அவா்களது 4 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.
இதனைக் கண்டித்தும், 4 விசைப்படகுகளுடன் 29 மீனவா்களையும் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேசுவரம் மீனவா்கள் கடந்த டிசம்பா் 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
இதனிடையே, கடந்த வாரம் சிறிய ரக விசைப்படகுகள் மட்டும் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பெரிய விசைப்படகுகளின் உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மீன்பிடி துறைமுகத்தில் மீனவ சங்க அவசரக் கூட்டம், தலைவா் சகாயம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மீனவ சங்கத் தலைவா்கள் எமரிட், தெட்சிணாமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
அதில், இலங்கையில் உள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும், இதனால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு கடலுக்குச் செல்லலாம் எனவும் தீா்மானிக்கப்பட்டது.
அதேநேரம், ராமேசுவரம் மீனவா்கள் இலங்கை மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக மீன்பிடிக்கக் கூடாது என்றும், அத்துமீறி செயல்படும் விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
போராட்டம் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, 17 நாள்களுக்குப் பின் ராமேசுவரத்திலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று சனிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


