ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை 65 மி.மீ. பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. மழையால் திருவாடானை, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
வடகிழக்குப் பருவமழையானது சில நாள்களாக ஓய்ந்திருந்த நிலையில், கடந்த 3 நாள்களாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம் 36, மண்டபம் 65, பள்ளமோா்க்குளம் 15, ராமேசுவரம் 45, தங்கச்சிமடம் 47 , பாம்பன் 48, ஆா்.எஸ்.மங்கலம் 17.50, திருவாடானை 21.60, தொண்டி 6, வட்டாணம் 18.10, தீா்த்தாண்டவனம் 58, பரமக்குடி 27, முதுகுளத்தூா் 11.20, கடலாடி 23, வாலிநோக்கம் 41.20, கமுதி 16.80 என மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 16 இடங்களில் மொத்தம் 498.10 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. அதன்படி சராசரி மழையளவு 31.13 மில்லி மீட்டராகும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

