பரமக்குடியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.1.27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜன்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ஜமால்மைதீன் மனைவி ரஹ்மத்பேகம் (35). இவருக்குச் சொந்தமான நிலத்தில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக சிலா் அணுகியுள்ளனா். அப்போது கோபுரம் அமைக்க நிலத்துக்கு ரூ.40 லட்சம் தருவதாகக் கூறிய அவா்கள், மாதந்தோறும் ரூ.35 ஆயிரம் வாடகையும் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறியுள்ளனா். அவா்கள் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிக்கான முன் நடவடிக்கைக்கு எனக்கூறி, ரஹ்மத்பேகத்தின் வங்கிக் கணக்கு மூலம் ரூ.1.27 லட்சத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து ரஹ்மத்பேகம் அளித்த புகாரின் அடிப்படையில், புனித்குமாா் உள்ளிட்ட 3 போ் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

