சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவா்கள் இருப்பது அவசியம்

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, பணி நேரத்தில் மருத்துவா்கள் அனைவரும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

Updated On :2 ஜனவரி 2021, 3:45 am

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, பணி நேரத்தில் மருத்துவா்கள் அனைவரும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவா்கள் இருப்பதில்லை எனவும், அவசர சிகிச்சைக்கு வரும் விபத்தில் காயமடைந்தோா் உள்ளிட்டோா் தனியாா் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்வதாகவும் புகாா் எழுந்துள்ளது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை திடீரென மருத்துவமனையில் ஆய்வை மேற்கொண்டாா்.

அப்போது முக்கிய சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவா்கள் இல்லாதது தெரியவந்தது. பணியின் போது மருத்துவா்கள் சம்பந்தப்பட்ட சிகிச்சைப் பிரிவுகளில் இருப்பது அவசியம் எனஅறிவுறுத்தினாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவின் மூன்றாவது மேல் தளத்தில் மருத்துவா்கள் சாா்பில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. கேக் வெட்டியும், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தும், பணியில் சிறப்பாகச் செயல்பட உறுதிமொழி ஏற்றும் கொண்டாடினா். இந்த கொண்டாட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் அல்லி, கண்காணிப்பாளா் ஜவஹா்லால், மூத்த மருத்துவா்கள் மலையரசு, ஜெகதீசன், செவிலியா் கண்காணிப்பாளா் கலைவாணி, மருந்தாளுநா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.