சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த புதுமணத் தம்பதி

கமுதி அருகே பாதுகாப்பு கோரி, காவல் நிலையத்தில், புதுமணத் தம்பதி, புதன்கிழமை தஞ்சம் புகுந்தனர்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:12 pm

கமுதி அருகே பாதுகாப்பு கோரி, காவல் நிலையத்தில், புதுமணத் தம்பதி, புதன்கிழமை தஞ்சம் புகுந்தனர்.

  அபிராமம் காவல் நிலைய சரகம் முத்து விஜயபுரத்தைச் சேர்ந்தவர் உடையார் மகன் பன்னீர் செல்வம் (33).

  இவருக்கும் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய சரகம் சுவாத்தானைச் சேர்ந்த சேதுராஜா மகள் லட்சுமி பிரியா (23)வுக்கும் கடந்த மாதம் திருமணம் குறித்து பேசப்பட்டதாம்.

  இதையொட்டி லட்சுமி பிரியாவை பெண் பார்க்க பன்னீர் செல்வம் வந்திருந்தபோது இருவரும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர். இதன் பின்பு இருவரும் செல் போனில்  பேசிவந்ததாகவும் கூறப்படுகிறது.

   இதற்கிடையே பன்னீர் செல்வத்துக்கு பெண் தர விருப்பம் இல்லை என்று கூறி லட்சுமி பிரியாவுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பன்னீர் செல்வத்தை விரும்பிய லட்சுமி பிரியா

வீட்டைவிட்டு வெளியேறி, பன்னீர் செல்வம் வீட்டுக்கு வந்து விட்டாராம்.

  புதன்கிழமை அபிராமம் கோவில் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

  இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று புதுமணத் தம்பதி இருவரும், அபிராமம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்கள். இதுகுறித்து சார்பு ஆய்வாளர் லட்சுமி விசாரணை நடத்தினார்.

      பெண் வீட்டாரை அழைத்துப் பேசி சுமூகமான முடிவு எடுப்பதாக உறுதி அளித்து, லட்சுமி பிரியாவை, பன்னீர்செல்வத்துடன் அனுப்பி வைத்தார்.